சினிமா

நீண்ட இடைவெளிக்குப் பின் entry கொடுத்த நடிகை…! “காளிதாஸ்-2” வசூலைக் கொடுக்குமா?

Published

on

நீண்ட இடைவெளிக்குப் பின் entry கொடுத்த நடிகை…! “காளிதாஸ்-2” வசூலைக் கொடுக்குமா?

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகை சங்கீதா, தனது திருமணத்திற்குப் பிறகு திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.  2014ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் கம்பேக் கொடுத்தார் நடிகை சங்கீதா. பின்னர் திரையுலகில் நடிப்பதனை தவிர்த்துக் கொண்டார்.இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்த் திரையுலகில் களமிறங்க இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் மூலம் சங்கீதா திரையுலகில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்புவதாக கூறியுள்ளார். இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.சங்கீதா 2010ஆம் ஆண்டு பிரபல பாடகர் கிருஷை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையை முக்கியமாகக் கருதி சினிமாவிலிருந்து விலகிக் கொண்டார். சில ஆண்டுகளாக வெள்ளித்திரையில் அதிகம் காணப்படாத அவர் தற்போது திரை உலகில் மீண்டும் நடிக்கத் தயாராகியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிப்பைத் தவிர்க்காமல் இருந்த சங்கீதா, இப்போது முழுமையாக திரையுலகில் திரும்பி வருவதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறார்கள். மேலும் ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் தனது நடிப்பு திறனை நிரூபிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் சந்தோசப்பட்டதுடன் அந்தப் படத்தைப் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version