உலகம்

2ம் உலகப் போர் குண்டு – பிரான்சில் பதற்றம்!

Published

on

2ம் உலகப் போர் குண்டு – பிரான்சில் பதற்றம்!

பிரான்ஸ் தலைநகர் பெரிசிலுள்ள பிரதான ரயில் நிலைய மார்க்கத்தில் 2ம் உலகப் போர் காலத்திற்கான வெடிக்காத குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களுக்கான பிரதான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ரயில் நிலையத்தை அண்மித்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையத்தை முற்றாக வெற்றிடமாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குண்டு செயலிழப்பு பிரிவினர் கண்டுபிடிக்கப்பட்ட குண்டை பாதுகாப்பாக அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இந்த குண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version