இலங்கை

அனுராதபுரத்திற்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்

Published

on

அனுராதபுரத்திற்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்

   அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (12) காலை 8:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாள பணி புறக்கணிப்பை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் முன்னெடுத்துவருகிறது.

இந்நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர வைத்திய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருந்தன.

இதனால் சேவையினை பெறவந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதுடன் ஏமாற்றத்துடனும் திரும்பி சென்றுள்ளனர்.

  அதேவேளை இன்று (12) பிற்பகல், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து அனுராதபுரம் வைத்தியசாலையின் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியுள்ளனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version