இலங்கை

கணவர் வெளிநாட்டில் ; தமிழர் பகுதியில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை

Published

on

கணவர் வெளிநாட்டில் ; தமிழர் பகுதியில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை

  திருகோணமலை மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

 இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மூதூர் தாஹா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

கணவர் வெளிநாட்டில் வசித்து வருபவர் எனவும் சிறிதரன் ராஜேஸ்வரி (68வயது) மற்றும் அவரது பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி (74வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

அத்துடன் உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த கொலை சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version