இலங்கை

தாயை கொலை செய்தவர்களுக்கு உதவியவரும் கைது

Published

on

தாயை கொலை செய்தவர்களுக்கு உதவியவரும் கைது

 தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாய் ஒருவரை எரித்து கொலை செய்ய உதவி செய்த மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் நேற்று (13) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடைய ஆணமடுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

Advertisement

55 வயது பெண் கொலை சம்பவத்தில் பெண்ணின் 35 வயது மகன், 30 வயது மகள் மற்றும் 34 வயதுடைய மருமகள் ஆகியோரை பொலிஸார் இதற்கு முன்னர் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர், தம்பகல்ல, கொலொன்கந்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணாவார்.

பெண்ணை மண்வெட்டியால் தாக்கி எரித்து கொலை செய்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இதேவேளை, கடந்த மாதம் 19 ஆம் திகதி எரகம பொலிஸ் பிரிவின் அரபா நகர் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றத்தை செய்த சந்தேக நபர், குற்றத்தைச் செய்த பின்னர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்று, வெலிகந்த பொலிஸ் பிரிவின் கட்டுவன்வில பகுதியில் மறைந்திருந்த போது, எரகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று முன்தினம் (12) கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version