இலங்கை

பெண் மருத்துர் பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு!

Published

on

பெண் மருத்துர் பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு!

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் இன்று காலை கல்னேவ பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மருத்துவரின் தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டறியும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது இக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று அனுராதபுரம் பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, ​​அவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version