இலங்கை

இலங்கையில் தொடர்ந்து கைப்பற்றப்படும் துப்பாக்கிகள்

Published

on

இலங்கையில் தொடர்ந்து கைப்பற்றப்படும் துப்பாக்கிகள்

வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாயக்குளம் பகுதியில் சந்தேக நபர் ஒருவர் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஓமந்தை பொலிஸாரால் நேற்று  (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 58 வயதுடைய ஓமந்தை நாயக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

அத்துடன் , அம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் 60 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் லுணுகம்வெஹெர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version