இலங்கை

பல இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சிக்கிய இளைஞன்

Published

on

பல இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சிக்கிய இளைஞன்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேக நபரான இளைஞன் பஹ்ரைனிலிருந்து இன்றைய தினம் காலை 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

]

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்  கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 30,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 150 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version