இலங்கை

யாழ். பொலிஸாரின் சுற்றிவளைப்பில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

Published

on

யாழ். பொலிஸாரின் சுற்றிவளைப்பில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று முற்றுகையிடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதன்போது 20 லிட்டர் கசிப்பு ஆறு பறல் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அத்தியூஸ் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சந்தேகத்தின்பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version