உலகம்

அன்ட் டாக்கிங் செய்யப்பட்ட ‘டிராகன்’-உலகமே உற்று நோக்கும் பயணம் தொடங்கியது

Published

on

அன்ட் டாக்கிங் செய்யப்பட்ட ‘டிராகன்’-உலகமே உற்று நோக்கும் பயணம் தொடங்கியது


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 18/03/2025 | Edited on 18/03/2025

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். இந்த திட்டத்தின் படி ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ம் தேதி பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சுமார் 9 மாதங்களாக இருவரும் விண்வெளியில் தங்கினர். கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் எந்த பலனும் அளிக்காமல் போனது. இதன் காரணமாக, விண்வெளி மையத்தில் சிக்கியிருக்கும் அவர்களை அழைத்து வர எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது.

Advertisement

அதன்படி 15-03-25 அதிகாலை 4.33 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலத்தில் நாசாவின் விண்வெளி வீரர்கள் நான்கு பேர் சர்வதேச விமான விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 400 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள விண்வெளி மையத்தை சுமார் 6 மணி நேரத்தில் டிராகன் – ‘க்ரூ’ விண்கலம் அடைந்திருந்தது. விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கும் பணியான டாக்கிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 9:37 மணிக்கு வெற்றிகரமாக முடிந்தது. வரும் 19ஆம் தேதி ஃப்ளோரிடாவில் நிலவும் வானிலை மாற்றங்களை பொறுத்து விண்கலமானது தரையிறங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்களுடன் டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி 10:35 மணிக்கு விண்வெளி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அன்ட் டாக் செயப்பட்டு பிரிந்து தற்பொழுது பயணத்தை தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3:27 மணிக்கு விண்வெளி வீரர்கள் பயணிக்கும் இந்த விண்கலம் பூமியை அடைய உள்ளது. இப்பயணம் எப்படி இருக்கப் போகிறது; இதில் ஏற்படும் சவால்கள் என்னென்ன  என உலகமே உற்று நோக்கி வருகிறது.

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த இளம்பெண்; போலீசார் விசாரணை!

  • கோயில்களில் பக்தர்கள் உயிரிழப்பு; அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

  • நாய்களுக்கு விஷம் வைத்துக் கொலை; போலீசார் தீவிர விசாரணை!

  • “முதல்வர் மு.க.ஸ்டாலின் நியாயத்தைக் கேட்கிறார்” – எழிலன் எம்.எல்.ஏ. பேட்டி!

  • தமிழக அரசுக்கு ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் முக்கிய கோரிக்கை!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version