உலகம்

அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

Published

on

அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால், அதற்கான கடும் விளைவை ஈரான் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
ஏமனிலிருந்து செயற்படும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இதேவேளை காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலிய கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்துவோம் என்று ஹவூதி கிளர்ச்சியாளர்கள் அண்மையில் அறிவித்ததை அடுத்து ஹவூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. 
 
இதனை தொடர்ந்து அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக ஹவூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version