இலங்கை

அரசிற்கு பல கோடி இழப்பை ஏற்படுத்திய சிகரெட் பொதி

Published

on

அரசிற்கு பல கோடி இழப்பை ஏற்படுத்திய சிகரெட் பொதி

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட, 12 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சிகரெட் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து இந்த சிகரெட் தொகையை, சுங்க வருமான பணிக்குழு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement

இதன்போது, சுமார் 713,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சிகரெட்டுகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து பாதுக்க பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு 124,019,554 ரூபாவாகும், இதனால் அரசாங்கத்திற்கு 107,985,621 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version