இலங்கை
பஞ்சாயுதத்தில் வீரவன்ஸ!
பஞ்சாயுதத்தில் வீரவன்ஸ!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி தனித்து ‘பஞ்சாயுதம்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளது என்று அதன் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
336 உள்ளுராட்சி சபைகளில் பெரும்பாலான சபைகளுக்கு தனித்தே போட்டியிடவுள்ளோம். உள்ளுராட்சிசபைத் தேர்தலில் எமது அணிக்கு வெற்றி கிடைக்கும் என நான் நம்புகின்றேன். ஊருக்காகவும், நாட்டுக்காகவும் இந்த தேர்தலை பயன்படுத்துமாறு முற்போக்கு சக்திகளிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன் – என்றார்.