இலங்கை

யாழில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

Published

on

யாழில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

இன்றையதினம் காலை 8.10 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றையவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக, தெல்லிப்பழையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

Advertisement

இந்த விபத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ள நிலையில் தெல்லிப்பழை ஆதார மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version