சினிமா

ரீ-ரிலிஸாகும் பாகுபலி திரைப்படம்!

Published

on

ரீ-ரிலிஸாகும் பாகுபலி திரைப்படம்!

தமிழ் திரையுலகில் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாகுபலி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
 
எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவானது. 
 
பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். 
 
இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை மக்களிடையே பெற்றது 
 
இந்திய மதிப்பில் 1800 கோடி ரூபாய்க்கும் மேல் பாகுபலி படம் வசூல் செய்துள்ளது. 
 
அதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பாகுபலி 2 ஆம் பாகம் வெளியானது. 
 
இந்த நிலையில், பாகுபலி முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,தற்போது ரீ-ரிலீஸ் செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
 
எதிர்வரும் 23 ஆம் திகதி இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version