உலகம்
திபெத்துக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் – அமெரிக்கா!
திபெத்துக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் – அமெரிக்கா!
திபெத் மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவும் செனட்டர் பீட்டர் மரோக்கோவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
‘திபெத்தியரின் உலகளாவிய அடிப்படை மற்றும் பிரிக்க முடியாத மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் தனித்துவமான கலாசார, மொழியியல் மற்றும் மதப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இராஜங்கச் செயலாளர் ரூபியோ வெளிப்படுத்தியுள்ளார். திபெத்தின் கல்விக் கவுன்சில் மற்றும் ஆலோசனைக் குழுவின் புத்திஜீவிகள் மாநாட்டிலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, திபெத்தின் அடையாளத்தைப் பாதுகாத்து ஊக்குவிப்பதற்கான மூலோபாய உத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ள இம்மாநாட்டில், திபெத்திய கல்வியை மேம்படுத்துவதற்கும் கலாசார விழுமியங்களுடன் வலுவான தொடர்பை வலுப்படுத்துவதற்கும் உள்ள முக்கிய தேவையும் வலியுறுத்தப்பட்டதாக கல்வி கவுன்சில் அமைச்சரவைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.