இந்தியா

பணிக்கொடையை வழங்காத புதுச்சேரி அரசுக்கு கண்டனம்; அங்கன்வாடி ஓய்வுபெற்றோர் நல சங்கம் போராட்டம்

Published

on

பணிக்கொடையை வழங்காத புதுச்சேரி அரசுக்கு கண்டனம்; அங்கன்வாடி ஓய்வுபெற்றோர் நல சங்கம் போராட்டம்

புதுச்சேரியில் ஓய்வுபெற்றவர்களுக்கு பணிக்கொடையை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து அங்கன்வாடி ஓய்வுபெற்றோர் நல சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓய்வு பெற்ற பெண் ஊழியர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரியில் அங்கன்வாடியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு இதுவரை அவர்களுக்கு ஓய்வு பெற்றதற்கான பணிக்கொடையை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த நிலையில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து ஓய்வு பெற்றோர் அங்கன்வாடி ஊழியர்கள் நல சங்கம் சார்பில் மாதா கோவில் அருகே புதன்கிழமை (19.03.2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் சட்டசபையை முற்றுகையிட மாதா கோவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டமன்ற நோக்கி வந்தனர்.அவர்களை போலீசார் தடுப்பு கட்டை அமைத்து சட்டமன்றம் அருகே தடுத்து நிறுத்தினர இதனை அடுத்து அங்கேயே அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.தொடர்ந்து அவர்கள் கோஷம் எழுப்பி கொண்டிருந்தபோது போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர் அப்போது, கிருஷ்ணவேணி என்கிற ஓய்வு பெற்ற ஊழியர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனால் போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனை அடுத்து அங்கு இருந்த காவலர்கள் மற்றும் ஊழியர்கள் துணையோடு அவர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.போராட்டத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version