இலங்கை

இராமநாதபுரத்தை சென்றடைந்த காணாமல்போன யாழ். மீனவர்கள்!

Published

on

இராமநாதபுரத்தை சென்றடைந்த காணாமல்போன யாழ். மீனவர்கள்!

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவரும் தமிழகத்தின் இராமநாதபுரத்தில் கரை சேர்ந்துள்ளனர்.

46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ் மற்றும் 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயிருந்தனர்.

Advertisement

குறித்த மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து குறிப்பிடத்தக்க தூரத்தின் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக தமிழக கரையோர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் மீனவர்கள் தத்தளித்த கடற்பகுதியில் ஒரு மூட்டையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் கஞ்சா பொட்டலங்களுக்கும்  தொடர்பு உள்ளதா என்பது என்ற கோணத்தில் அந்நாட்டு பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version