இலங்கை

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 24 வயதான பெண் ஒருவர் கைது!

Published

on

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 24 வயதான பெண் ஒருவர் கைது!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் தெரு பகுதியில் கடந்த 17 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், இருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டிருநு்தது.

Advertisement

இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காகவும், உடந்தையாக இருந்ததற்காகவும் ஒரு சந்தேக நபர் ராஜகிரிய பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக சந்தேக நபரின் மனைவி நேற்று (20) கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் கொட்டவில, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version