இலங்கை

திருகோணமலையில் இருந்து வந்த விமானம் மினுவங்கொட பகுதியில் விழுந்து விபத்து!

Published

on

திருகோணமலையில் இருந்து வந்த விமானம் மினுவங்கொட பகுதியில் விழுந்து விபத்து!

வாரியபொல – மினுவங்கொட பகுதியில் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 பயிற்சி ஜெட் விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், அவர்கள் இருவரும் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பாராசூட்டின் உதவியுடன் அவர்கள் விமானத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெட் விமானம் திருகோணமலையில் உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

Advertisement

ரேடார் தொழில்நுட்ப அமைப்பின் செயலிழப்பு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விமானம் தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version