இலங்கை

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Published

on

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.

மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று(21) காலை சுற்றிவளைத்தனர்.

Advertisement

சுற்றிவளைப்பு தேடுதலின் போது 06 பரள்களில் ஆயிரக்கணக்கான மில்லி லிட்டர் கோடா மற்றும் கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டதுள்ளது.

கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பரல்கள்,போத்தல்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version