இலங்கை

60 அடி பள்ளத்தில் பாய்ந்த பாரவூர்தி; சாரதிக்கு நேர்ந்த கதி

Published

on

60 அடி பள்ளத்தில் பாய்ந்த பாரவூர்தி; சாரதிக்கு நேர்ந்த கதி

கண்டி – மாத்தளை ஏ9 வீதியில் இன்று காலை மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று 60 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது .

இவ்விபத்தில் பாரவூர்தியின் சாரதி காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கண்டியிலிருந்து கட்டுகஸ்தோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ்  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version