இந்தியா

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் புதிய திருப்பம்!

Published

on

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் புதிய திருப்பம்!

பிரபல இந்திய பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும், நடிகை ரியா சக்கரபோர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு சி.பி.ஐ தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலை என்பதை சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள சி.பி.ஐ, மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது. 

Advertisement

இதன்படி, நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் உத்தியோகப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர்களுக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. 

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14, 2020 அன்று தனது மும்பை வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version