நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 25/03/2025 | Edited on 25/03/2025
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்த சம்பவம் நியூசிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தின் மேற்கு பகுதியில் இந்திய நேரப்படி காலை 7:13 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தற்பொழுது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியே ஓடிவந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
- “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
- “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்