இலங்கை

கிழக்கில் செயல்படும் தீவிரவாதக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – நளிந்த ஜெயதிஸ்ஸ

Published

on

கிழக்கில் செயல்படும் தீவிரவாதக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – நளிந்த ஜெயதிஸ்ஸ

கிழக்கு மாகாணத்தில் செயல்படும் முஸ்லிம் தீவிரவாதக் குழு குறித்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை தொடர்ந்து அந்தக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தல் நடைபெற்றது.

இதில்ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ;
கிழக்கு மாகாணத்தில் செயல்படும் தீவிரவாதக் குழு குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் உள்ளனர்.

Advertisement

குறித்த இப்பகுதியில் செயல்படும் ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு குறித்து தகவல் கிடைத்துள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் குழு பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிய பொலிஸார், புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.  இந்த விடயம் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சில தகவல்களையும் வழங்கினார்- என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version