இலங்கை

தமிழர் பகுதியில் போதைப்பொருட்களுடன் பல சந்தேக நபர்கள் கைது

Published

on

தமிழர் பகுதியில் போதைப்பொருட்களுடன் பல சந்தேக நபர்கள் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுத்திவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி,நாவற்குடா, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி புதுக்குடியிருப்பு உட்பட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

 குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த மற்றும் விற்பனை செய்த 28 பேரும், கேரள கஞ்சாவை வைத்திருந்த மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 18 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே நேரம் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version