உலகம்
ஜப்பான் கைதிக்கு 1.4 மில்லியன் இழப்பீடு!
ஜப்பான் கைதிக்கு 1.4 மில்லியன் இழப்பீடு!
சர்வதேச செய்திகள்
படிக்க 1 நிமிடங்கள்
பகிர்
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாது தவறுதலாக நீண்டகாலம் மரணதண்டனைக்கு உட்பட்டிருந்த கைதியொருவருக்கு ஜப்பான் நீதிமன்றம் 1.44 மில்லியன் அமெரிக்க டொலரை இழப்பீடாக வழங்க இணங்கியுள்ளது. 1966ம் ஆண்டு Iwao Hakamada என்ற ஜப்பானியர் மரண தண்டனை தீர்ப்புக்கு உள்ளாகியிருந்தார்.
அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையிலேயே அவர் சுமார் 46ஆண்டுகாலம் மரணதண்டனை தீர்ப்புக்கு உள்ளாகியிருந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அவர் விடுதலையானார்.
அவரது மரணதண்டனை தீர்ப்பு ரத்தாகியதனால் அவர் இவ்வாறு விடுதலையானார். இந்நிலையில் தவறு செய்யாது தண்டனை அனுபவித்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டுமென இவாவோரின் சட்டக் குழுவினர் நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்த இழப்பீடு தொகையை வழங்க அந்நாட்டு நீதிமன்றம் இணங்கியுள்ளது.
ஜப்பான் பிரஜையொருவர் குற்றவியல் இழப்பீடாக பெற்றுக்கொண்ட மிகப்பெரிய தொகை இதுவாகும்.