இலங்கை

இறுதிச் சடங்கிற்கு சென்ற இராணுவ சிப்பாய்; இறுதியில் நேர்ந்த சோகம்

Published

on

இறுதிச் சடங்கிற்கு சென்ற இராணுவ சிப்பாய்; இறுதியில் நேர்ந்த சோகம்

நேற்று (27)  திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கப்புகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கேகாலையில் வசிக்கும் 38 வயதுடைய சிப்பாய் ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். 

Advertisement

உயிரிழந்த இராணுவ சிப்பாய், மேலும் மூன்று சிப்பாய்களுடன், அதே இராணுவ தளத்தில் பணியாற்றும் ஒரு சிப்பாயின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கீழ் திவுல்வேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (27)  இறுதிச் சடங்குகளை முடித்துக்கொண்டு இராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​கீழ் திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்றிருந்தபோது, ​​குறித்த இராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version