இலங்கை

இளைஞர் சேவைகள் மன்ற ஊழல் அறிக்கைகள் சட்டமா அதிபரிடம்!

Published

on

இளைஞர் சேவைகள் மன்ற ஊழல் அறிக்கைகள் சட்டமா அதிபரிடம்!

இளைஞர் சேவைகள் மன்றத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் கோப் குழு வெளிப்படுத்திய உண்மைகளின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் அறிக்கைகளை சமர்ப்பித்த பின்னர், சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்க கோப் குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 முன்னாள் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Advertisement

இரண்டு அறிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தொடர்புடைய அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்று கோப் குழு உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளிடம் அண்மையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நிறுவனத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் வெளிப்பட்டதாகவும், அதன்படி  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் குறித்து நீண்ட விசாரணை நடத்துமாறு இளைஞர் விவகார அமைச்சின் தற்போதைய செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்தார்.

இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள் நிச்சயமாக சட்டமா அதிபர் மூலம் வழக்குத் தொடரப்படுவார்கள் என்றும்,நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்தார்.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version