இலங்கை

டக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று யாழில்!..

Published

on

டக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று யாழில்!..

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான வைத்தியர் எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது

இக்கலந்துரையாடல் சுமார் நான்கு வருடங்களின் பின்னர் வலிகாமம் வடக்கு  பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டமாக காணப்படுகின்றது

Advertisement

நான்கு வருட காலமாக அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலகத்தில் நடைபெறாமையால் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இக்கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது பலாலி விமான நிலைய அபிவிருத்தி  காணி  விடுவிப்பு  கடற்றொழில்  விவசாயம் வீதிகளின் அபிவிருத்தி சுகாதாரம் நீர்ப்பாசனம் விவசாயம் போன்ற விடையங்கள் இங்கு பிரதானமாக கலந்துரையாடப்பட்டது

இக்கலந்துரையாடலில் வழிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் S. சிவகெங்கா துறை சார்ந்த அதிகாரிகள் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கலந்துகொண்டனர். (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version