இலங்கை
நாட்டில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று ; மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று ; மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 824 ஆகும். இதில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 115 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதாகவும், மக்கள் உடனடியாக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.