இலங்கை
உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!
உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் குளக்கரை பகுதியில் இன்று காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆணா பெண்ணா என்ற அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் இருந்து ஆண்கள் அணியும் மேல் ஆடை ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.