இந்தியா

ஜார்க்கண்ட் ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்!

Published

on

ஜார்க்கண்ட் ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்!

ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (01)அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மின்சார உற்பத்தி நிறுவனமான NTPC-யால் இயக்கப்படும் இரண்டு ரயில்களுக்கு இடையேயான மோதல், இன்று அதிகாலை 3:00 மணியளவில் பர்ஹைட் பொலிஸ் நிலையப் பகுதியில் உள்ள போக்னாதி அருகே இடம்பெற்றுள்ளது.

விபத்து நடந்த தண்டவாளங்களும் NTPC-க்குச் சொந்தமானவை, மேலும் அவை முக்கியமாக அதன் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இரண்டு சரக்கு ரயில்களின் சாரதிகளும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

விபத்து நடந்த பாதை பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள NTPC-யின் கஹல்கான் சூப்பர் அனல் மின் நிலையத்தையும் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபராக்கா மின் நிலையத்தையும் இணைக்கிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version