இந்தியா

நித்தியானந்தா இறந்துவிட்டார் – சகோதரி மகன் தகவல்!

Published

on

நித்தியானந்தா இறந்துவிட்டார் – சகோதரி மகன் தகவல்!

பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் அறிவித்துள்ளார்.

காணொளி ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாகவும் அவர் காணொளி பிரசங்கத்தில் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தாவுக்கு எதிராக பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்து நாடு கடத்த பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் அவர் இருக்கும் இடம் இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை. இந்தியாவில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில், தலைமறைவான அவர் இந்துக்களுக்கான நாடு என்ற பெயரில் திடீரென கைலாசா எனும் தனித்தீவை உருவாக்கினார்.

Advertisement

இந்த நாட்டுக்கு என தனி நாணயம், கடவுச்சீட்டு, தனிக் கொடி உள்ளிட்டவைகளையும் அவர் நிர்மானித்தார். மேலும் தனது நாட்டில் தொழில் தொடங்குமாறும் அவர் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என கூறப்பட்ட நிலையில், திடீரென காணொளி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

நித்தியானந்தா கடந்த இரு நாட்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பில் கைலாசாவில் இருந்து மறுப்பு எதுவும் வரவில்லை.

Advertisement

இந்த நிலையில் நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சத்சங்க காணொளியில் இந்து தர்மத்தை காப்பதற்காக சாமி (நித்தியானந்தா) உயிர்த் தியாகம் செய்துவிட்டார் என கூறியிருந்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version