இலங்கை

யாழ் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

Published

on

யாழ் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இரண்டு படகுகளுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்

Advertisement

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று (1) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த இரண்டு படகுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்

Advertisement

கைது செய்யப்பட்ட நபர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version