இலங்கை

மோடி வருகையை முன்னிட்டு கொழும்பிற்கு வந்த விசேட பாதுகாப்பு குழு

Published

on

மோடி வருகையை முன்னிட்டு கொழும்பிற்கு வந்த விசேட பாதுகாப்பு குழு

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக, இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க இந்தியாவில் இருந்து ஒரு மேம்பட்ட பாதுகாப்புக் குழு கொழும்புக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisement

இந்நிலையில், இந்தியப் பிரதமரின் வருகையின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்ய பொலிஸாருக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், வருகைக்கான ஆயத்தமாக இன்று (2) பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version