இலங்கை

கிளிநொச்சியில் பேருந்துகளுக்கு இடையிலான முறுகல் ; இன்னலுக்குள்ளான மக்கள்

Published

on

கிளிநொச்சியில் பேருந்துகளுக்கு இடையிலான முறுகல் ; இன்னலுக்குள்ளான மக்கள்

கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளருக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இலங்கை உணவகம்

Advertisement

இதனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்ல முற்பட்ட இரண்டு பேருந்தினருக்கும் முறுகல் ஏற்பட்டது.

Advertisement

இதனால் பயணிகள் அசெளகரியங்களை எதிர்நோக்கி வேறு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரு தரப்பினரும் கிளிநொச்சியில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version