இலங்கை

கொத்துக் கொத்தாக மீட்கப்படும் உடல்கள் ; மியன்மாரில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Published

on

கொத்துக் கொத்தாக மீட்கப்படும் உடல்கள் ; மியன்மாரில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது.

மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement

ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

மியன்மாரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில், மியன்மார் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,003 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 4500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், தாய்லாந்தில் நிலநடுக்கத்தில் மாயமான 100க்கும் அதிகமானோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்பணிகள் இடம்பெறுகின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version