இலங்கை

சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணின் வாழ்வை சீரழித்த வைத்தியர்

Published

on

சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணின் வாழ்வை சீரழித்த வைத்தியர்

நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்த இளம் பெண் ஒருவர், அங்குள்ள மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

சிகிச்சைகாக  வந்த இளம் பெண்ணை, சம்பந்தப்பட்ட மருத்துவர்  பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக  பொலிஸாருக்கு புகார் கிடைக்கப்பெற்றுள்ளது.

Advertisement

இது குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கருத்து தெரிவிக்கும் போது குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்   மருத்துவ சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version