இலங்கை
சுமந்திரன், சத்தியலிங்கம், சிவஞானம் ஆகியோருக்கு எதிராக போராட்டம்
சுமந்திரன், சத்தியலிங்கம், சிவஞானம் ஆகியோருக்கு எதிராக போராட்டம்
கிளிநொச்சி A9பிரதான வீதி ஓரம் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன், சத்தியலிங்கம், சிவஞானம் ஆகியோருக்கு எதிராக தனிநபர் ஒருவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் ஜீவராஜா என்பவரே போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
சுமந்திரன், சத்தியலிங்கம்,C.v.k சிவஞானம் போன்றவர்களுக்கு எதிராக தனது எதிர்ப்பினை வெளிக்காட்டி போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன், சத்தியலிங்கம், சிவஞானம் ஆகியோர் மீது மக்கள் வைத்துள்ள எண்ணப்பாடு இதுதான் என்றும், இவர்களாக விலகி போவதுதான் தமிழ்த்தேசியதுக்கு நன்மை எனவும் அவதானிகள் கூறியுள்ளனர்.