இலங்கை
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்கும் அபாயம்!
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்கும் அபாயம்!
அமெரிக்காவின் புதிய வரி கொள்கையின் அடிப்படையில் இலங்கை உள்ளிட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணம் கிடைக்கும் அனைத்து நாடுகளுக்கும் அது இல்லாமற்போகும் நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நெருக்கடி தேசிய ரீதியானது. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கலாம். பாதுகாப்புவாதக் கொள்கைகளுக்குத் திரும்புவதற்குப் பதிலாக இலங்கை கட்டணச் சுவர்களை உடைத்து வர்த்தகப் பாலங்களைக் கட்டவேண்டும்.
நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.