இலங்கை
நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்!
நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை எதிர்த்து சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த பல இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மோடியின் இலங்கை வருகைக்கும் அங்கு கையெழுத்தான ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இருப்பினும், அவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்படவில்லை என்றும், மேலும் தொடர்புடைய அனைத்து சுவரொட்டிகளும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.