இலங்கை

யாழ் பல்கலை மாணவனுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு

Published

on

யாழ் பல்கலை மாணவனுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரினால் இறுதியாண்டு சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப்பெறப்பட்டிருந்த நிலையில் தற்போது விசாரணைச் செயன்முறைகள் அனைத்தும் நிர்வாகத்தினால் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலம் வரை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றிய குறித்த மாணவனால் தனக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை சட்ட நியமங்களிற்கு அப்பாற்பட்டதெனக் குறிப்பிட்டு கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

கடந்த 13.02.2025 அன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 15.02.2025 அன்று வகுப்புத்தடை நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விசாரணைச் செயன்முறைகள் அனைத்தினையும் கைவிடுவதாகவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எனினும் மாணவனிக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடையை “தவறானது” என்று அறிவிக்கக் கோரியும், இழப்பீடு உள்ளிட்ட நிவாரணங்களைக் கோரியும் குறித்த வழக்குத் தொடரும் என்று மாணவன் சார்பில் முன்னிலையான யாழ் பல்கலையின் சட்டத்துறை முன்னாள் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் தெரிவித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version