இலங்கை

விற்பனைக்கு தயாராக இருந்த பல இலட்சம் பெறுமதியான கஜமுத்து; சிக்கிய இளைஞன்

Published

on

விற்பனைக்கு தயாராக இருந்த பல இலட்சம் பெறுமதியான கஜமுத்து; சிக்கிய இளைஞன்

கம்பஹா – திவுலப்பிட்டி நகரத்தில் இரண்டு கஜமுத்துக்களுடன் இளைஞன் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் நேற்று  (04) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலபிட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்த இரண்டு கஜமுத்துக்களையும் 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version