இலங்கை
பெற்ற மகளைக் கடத்திய தந்தை ; பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு
பெற்ற மகளைக் கடத்திய தந்தை ; பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு
வெலிகம – பொரலாகம பகுதியில் திருமணமான பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் காணாமல் போன பெண் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு இரு உறவினர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.