இலங்கை
போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன் ; சோதனையில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன் ; சோதனையில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஹபராதுவ பொலிஸ் பிரிவின் யத்தேஹிமுல்ல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உனவடுன பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.
இந்த கைது நடவடிக்கையின் போது, 80 கிராம் ஐஸ் போதைப்பொருள் , 04 கிராம் கொக்கைன் போதைப்பொருள் , 30 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் மற்றும் 65 போதை மாத்திரைகளை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் குறித்து ஹபரதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.