இலங்கை
அமெ. வரிச் சிக்கலைத் தீர்க்க இந்தியாவை நாடிய இலங்கை
அமெ. வரிச் சிக்கலைத் தீர்க்க இந்தியாவை நாடிய இலங்கை
தொழில் அமைச்சர் அனில் ஜயந்த தகவல்
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக்கொள்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசாங்கம் தீர்வைக் கோரியிருந்தது. அதற்குச் சாதகமான பதில் கிடைத்துள்ளது என்று தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
நாட்டின் பெரும்பாலான ஏற்றுமதிகள் ஆடைத் துறையில் தங்கியுள்ளதால், அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கையால் நாட்டின் ஆடைத் தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் தொடர்புடைய இறக்குமதி வரிக்கொள்கை பொருந்தும்.
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை மற்றும் அதன் விளைவாக நாட்டைப் பாதித்த பிரச்சினைகள் தொடர்பாக இலங்கைக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசாங்கம் ஒரு தீர்வைக் கோரியிருந்தது. அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது-என்றார்.