இலங்கை

விமானத்தில் கைவரிசை ; கையும் களவுமாக பிடிபட்ட சீன பிரஜைகள்

Published

on

விமானத்தில் கைவரிசை ; கையும் களவுமாக பிடிபட்ட சீன பிரஜைகள்

தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் கைபையில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் இருவர், விமான நிலைய பொலிஸாரினால் இன்று  (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமையைப் பெற்றுள்ள 71 வயதான இவர், ராகம, வெலிசறை பகுதியில் வசிக்கும் உறவினர்களைப் பார்க்க தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் TG-307 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

Advertisement

 

அவர் தனது சூட்கேஸை விமானத்தின் லக்கேஜ் ரேக்கில் வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​விமானத்தில் பயணம் செய்த இரண்டு சீன பிரஜைகள் சூட்கேஸிலிருந்து 2,000 அமெரிக்க டாலர்கள் மற்றும் 60,000 இலங்கை ரூபாய்களைத் திருடியுள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்ற பயணிகள், விமானக் குழுவினருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, விமானக் குழுவினர் சீன நாட்டவர்கள் இருவரையும் விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 நடத்தப்பட்ட விசாரணைகளில், அவர்கள் திருடிய பணத்தில் சிலவற்றை பொலிஸாரால் மீட்க முடிந்துள்ளது.

அதன்படி, 36 வயதான சீன நாட்டவரிடமிருந்து 900 அமெரிக்க டாலர்கள் மற்றும் இலங்கை ரூபாய் 55,000 மற்றும் 39 வயதான மற்றொரு சீன நாட்டவரிடமிருந்து 300 அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் சீன நாட்டவர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version