இலங்கை
ருஷ்டி விடுதலை!
ருஷ்டி விடுதலை!
இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்களை உள்ளடக்கிய ஸ்ரிக்கர் ஒட்டியமைக்காக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மொஹமட் ருஷ்டி நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.
மார்ச் மாதம் 22ஆம் திகதி கொழும்பில் உள்ள வணிக வளாகத்தில் வைத்து ருஷ்டி கைது செய்யப்பட்டார். சாதாரண குற்றத்துக்காக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். இது நாடெங்கும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்தக் கைதுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொழும்பில் திரண்டு போராட்டங்களையும் நடத்தியிருந்தன. அத்துடன், அரசாங்கத்துக்கு எதிராகவும், ஜனாதிபதி அநுரவுக்கு எதிராகவும் அண்மைய நாள்களாகக் கடும் விமர்சனங்களையும் இந்தக் கைது உருவாக்கியிருந்தது. இதையடுத்தே, மொஹமட் ருஷ்டி நேற்று மாலை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.