இலங்கை

மீன் லொறியை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published

on

மீன் லொறியை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

   மீன் லொறியில் 05 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீர்கொழும்பின் பிடிபன லெல்லம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்களை கொண்டு செல்வதாக கூறி சந்தேக நபர்கள் இந்த கஞ்சாவை கொண்டு சென்றுள்ள நிலையில், லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கிராம் கஞ்சாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் துங்கல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version